Header Ads



நாட்டில் பெரும்பான்மையான பிக்குமார், அடிப்படைவாதிகள் அல்ல - சந்திரிக்கா

பௌத்த பிக்குமார் மத்தியிலும் சில அடிப்படைவாதிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த பெரிய சேவைகளை மேற்கொண்டு வரும் பௌத்த பிக்குமாரும் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நாயக்க தேரர் ஒருவரை நாங்கள் அம்பாறையில் சந்தித்தோம். இப்படி மக்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்த பெரிய சேவைகளை செய்யும் பௌத்த பிக்குமார் உள்ளனர்.

பௌத்த பிக்குகள் அனைவரும் சிங்கள அடிப்படைவாதிகள் என்று நாம் எண்ணுகிறோம். அப்படியான சிலர் இருக்கின்றனர் என்பது உண்மை.

சில அடிப்படைவாதிகள் இருந்தாலும் நாட்டில் பெரும்பான்மையான பிக்குமார் அடிப்படைவாதிகள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.