Header Ads



முஸ்லிம் தலை­வர்­கள் பற்றி, பஷில் அம்பலப்படுத்தும் முக்கிய விடயங்கள்

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் இறுதித் தரு­ணங்­களில் எம்மை விட்டு விலகிச் சென்­றனர். எனினும் சிறு­பான்மை மக்கள் குறிப்­பாக முஸ்­லிம்கள் தங்­க­ளது கட்சித் தலை­மை­களை  விட முன்­ன­தா­கவே எங்­களை விட்டும் விலகிச் சென்று விட்­டனர் என்­பதை நாம் அறிந்து கொண்டோம். இது முஸ்லிம் கட்சித் தலை­வர்­களை பின்­பற்­று­வ­தற்கு முஸ்­லிம்கள் தயா­ரில்லை என்­ப­தையே எமக்கு தெளி­வு­ப­டுத்­து­கி­றது என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது  ஒரு முஸ்லிம் தலைவர், அவர் எம்மை விட்டு வில­கு­வ­தற்கு ஒருநாள் முன்­ன­தாக என்னை சந்­தித்து சுமார் 3 மணித்­தி­யா­லங்கள் உரை­யா­டினார். எந்­நி­லை­யிலும் ராஜ­ப­க் ஷ­விற்கு எதி­ரா­கவே வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் முஸ்லிம் மக்கள் உறு­தி­யாக உள்­ள­தா­கவும், அதனால் அவ­ரது ஆத­ரவு எவ்­வி­தத்­திலும் எமக்குப் பய­ன­ளிக்கப் போவ­தில்லை எனவும் கூறினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் இதையே என்­னிடம் கூறி­யது. இது, மக்கள் தலை­வர்­களை பின்­பற்ற தயா­ரில்லை என்­ப­தையே உணர்த்­து­கி­றது. முஸ்லிம் மக்கள் அவர்­க­ளது தலை­வர்­களை  விட ஒரு­படி மேல் சென்­று­விட்­டார்கள். இத­னையே நாம் மலை­ய­கத்­திலும் கண்டோம். 

கடந்த காலங்­களில் பல­த­ரப்­பட்ட அர­சியல் இடைத் தர­கர்கள் மூல­மாக சிறு­பான்மை மக்­களை கவர்ந்து வந்தோம். இந்­ந­டை­முறை தற்­போது இல்­லாமல் போய்­விட்­டது. சுதந்­திரக் கட்சி நிறு­வப்­பட்­ட­போது பண்­டா­ர­நா­யக்க, பதி­யுதீன் மஹ்மூத் போன்ற முஸ்லிம் ஆளு­மை­களை கட்­சியில் இணைத்துக் கொண்டார்.  கட்­சியின் முன்­னணி உறுப்­பி­னர்­க­ளாக இஸ்­லா­மிய சமூ­கத்­தினர்  இருந்­தனர்.

1977 இல் தோல்­விக்கு பின்னர் அந்­ந­டை­முறை இல்­லாது போய்­விட்­டது. அதன் பின்னர் முஸ்லிம் சமூ­கங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் ஊடா­கவே முஸ்லிம் சிறு­பான்­மையை கவர வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது. அதன் பின்னர் சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி என்­பன முஸ்லிம் தலை­வர்­களை இரண்டாம், மூன்றாம் மட்­டத்­தி­லேயே வைத்து நோக்­கின. 

அஷ்ரப் அவர்­க­ளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர்  முஸ்லிம் தலை­வர்கள் முக்­கிய கட்­சி­களில் தங்­க­ளது இருப்­புக்­களை  இழந்து வந்­தனர். இது பாத­க­மான விட­ய­மாகும். அஷ்ரப் அதனை பின்­னரே உணர்ந்தார். அத­னால்தான் தேசியப் பட்­டி­யலில் சிங்­க­ளவர் ஒரு­வரை பாரா­ளு­மன்­றத்­திற்கு பிரே­ரித்தார். 

அஷ்ரப்பின் மறை­வுக்கு பின்­ன­ரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை இதுபற்றி அக்­கறை செலுத்­த­வில்லை. சிறு­பான்மை கட்­சி­களின் தயவில் அன்றி சிறு­பான்மை மக்­களை  பிர­தான கட்­சிகள் நேர­டி­யாக அணுக வேண்டும்.

உண்­மையில், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலா­னாவின் மறைவு எமக்கு பாரிய இழப்­பாகும். அஸ்­வரின் மரணம் மற்றுமொரு பேரிடியாகும். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக கிராம மட்டத்தில் முஸ்லிம் தலைவர்களை இனங்கண்டுள்ளோம். மாகாண மட்ட முஸ்லிம் தலைவர்கள் எம்மிடம் உள்ளனர். இனி வரும் காலங்களில் தேசிய ரீதியில் முஸ்லிம் தலைவர்களை எமது கட்சி அறிமுகப்படுத்தும்.

(ஹஸன் இக்பால்)

1 comment:

Powered by Blogger.