Header Ads



இலங்‍கை முஸ்­லிம்­களை, தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்க முயற்சி

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்கும் ஒரு கலா­சாரம் பிராந்­திய சர்­வ­தேச நிகழ்ச்­சி ­நி­ர­லோடு இணைந்து இடம்­பெ­று­மா­க­வி­ருந்தால் ஒட்டு மொத்த தமிழ் மக்­களின் இருப்பை கேள்­விக்­குட்­ப­டுத்தும். இது திட்­ட­மிட்ட முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இது பல்­வேறு சர்­வ­தேச அர­சி­ய­லுடன் தொடர்­பு­பட்­டுள்­ளது. ஆகவே தமிழ், முஸ்லிம் தரப்பு இதனை நிதா­ன­மா­கவும் பொறுப்­பா­கவும் கையா­ள­வேண்டும் என சித்­தி­லெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார். 

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் புதிய அர­சியலமைப்பு தொடர்­பான தெளி­வு­ப­டுத்தல் கூட்டம் "ஓர் அர­சியல் தீர்வை எதிர்­கொள்ளல்" எனும் தலைப்பில்  செவ்­வாய்க்­கி­ழமை யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்­போது "வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்­லிம்­களும்" எனும் தலைப்பில் பதில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்­லிம்­களும் என்ற விவ­காரம் சர்ச்­சைக்­கு­ரிய விடயம் அல்ல. சந்­தைக்கு வர­வேண்­டிய விடயம். கத்­த­ரிக்காய் முற்­றினால் சந்­தைக்கு வந்­துதான் ஆக­வேண்டும். அந்த யதார்த்தத்தை பேசு­வ­தற்கு முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து  பொறி­முறை எது­வு­மில்லை என்­ப­துதான் எமது முத­லா­வது குற்­றச்­சாட்­டாகும். காணி நிலம் வேண்டும் என பார­தி­ பா­டினான். சமஷ்டி பற்றி பேசி­னாலும் வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசி­னாலும் அவை நிலம் சார்ந்த அர­சியல் பரி­மா­ணங்­க­ளே­யாகும்.  வடக்கும் கிழக்கும் நில ரீதி­யாக இணைந்த பிர­தேசம், தமிழ் பேசும் மக்­களின் பூர்­வீக நிலம் என்ற அடிப்­ப­டையில் 1956 ஆம் ஆண்டு திரு­மலை மாநாட்­டி­லி­ருந்து ஒன்­றா­கவே இருந்­துள்ளோம். தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி பேசப்­படும் போது முஸ்­லிம்­க­ளுக்கு தென்­கி­ழக்கு அலகு பற்றிப் பேசப்­பட்டு வந்­தது. கங்­கா­ருவும் குட்­டி­யும்­போல தமிழ்த்­தே­சத்தின் மடி­யி­லேதான் முஸ்லிம் தேசியம் அடை­காக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. 

இருப்­பினும் ஆங்­காங்கே நடந்த கருத்­தியல் சம்­ப­வங்­களும் ஆயு­தக்­கு­ழுக்­களின் துன்­பியல் சம்­ப­வங்­களும் எங்­க­ளு­டைய தாய்­மையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யது. அவ்­வாறு கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்­டதன் விளை­வாக வடக்கு கிழக்கு இணைப்­பிற்கு முஸ்­லிம்கள் எதி­ரா­ன­வர்கள் என்று இந்த அர­சாங்கம் திட்­ட­மிட்ட பரப்­பு­ரையை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது.  வடக்கு கிழக்கு இணைப்பு என்று வரு­கின்­ற­போது தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு பேச வேண்டும் என்­ப­தோடு வடக்கும் கிழக்கும் பேச­வேண்டும் என்ற இரு நில­மைகள் உள்­ளன. வட­கி­ழக்கு இணைப்­புக்­கு­றித்து முஸ்­லிம்­களில் உள்ள பொறி­முறைக் கோளா­று­களை வட­மா­காண தரப்­புக்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

வடக்கு கிழக்கு இணைப்­பிற்­காக உரு­வாக்­கப்­பட்ட கிழக்கு மாகா­ணத்தை மையப்­ப­டுத்­திய முஸ்லிம் தலைமை கால ஓட்­டத்தில் கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியில் சென்­ற­மையால் இந்த விட­யத்தை மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் பார்க்­கின்ற துர­திஷ்ட வச­மான நிலமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  சிறீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் சேதா­ர­மில்­லாத விட்­டுக்­கொ­டுப்பு என்ற விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். செய்­கூலி தெரிந்த ஒரு­வ­ருக்­குத்தான் சேதா­ரம்­பற்­றிய வலி தெரியும். இவ­ருக்கு செய்­கூ­லியும் தெரி­யாது சேதா­ரமும் தெரி­யாது.  வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பாக அவர் மௌன­மான பார்­வை­யா­ளராக செயற்­ப­டு­கின்றார். வடக்­கு­கி­ழக்கு முஸ்­லிம்கள் தொடர்­பாக உரித்­தோடு உரத்த தொனியில் பேசினால் அவரால் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது போய்­விடும்.  இதே­போன்று வடக்­கு­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் தமிழ்த்­தே­சி­யத்­தினை எடுத்­துக்­கொண்டால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிம்­ப­மாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பொறிக்குள் சிக்­குண்­டுள்­ளது. 

இவ்­வா­றான நிலையில் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் தேர்தல் நலனை மட்டும் மைய­மா­க ­வைத்து செயற்­படும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு அப்பால் தேசிய முஸ்லிம் தலை­மைத்­துவ சபை ஒன்று அவ­சியம் எனக் கரு­தி­னார்கள். இதன் கார­ணத்தால் கிழக்­கு­மா­காண சிவில் சமூகம் மற்றும் அர­சியல் வாதிகள் கூட்­டி­ணைந்து கிழக்கு மக்கள் அவையம் என்­பதை உரு­வாக்­கி­யுள்ளோம்.  கிழக்கு மக்கள் அவை­யத்தின் இணைச் செய­லாளர் என்ற வகையில் தமிழ் மக்கள் பேர­வை­யுடன் கிழக்கு மக்கள் அவையம் வடக்­கு­கி­ழக்கு இணைப்புத் தொடர்பில் நீண்ட கலந்­து­ரை­யா­டலைச் செய்­வ­தற்கு பகி­ரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்­கின்­றது என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.  தற்­போது வடக்­கு­ கி­ழக்கு இணைப்பு விவ­கா­ரத்தில் கிழக்­கி­லுள்ள முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்கள் பற்றி தவ­றான கருத்­துக்­களை வடக்­கிலும் வடக்­கி­லுள்ள முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பற்றி கிழக்­கிலும் தவ­றாக பிர­சாரம் செய்­கின்­றார்கள். தமி­ழர்கள், முஸ்­லிம்கள் ஒரு மேசைக்கு வரு­கின்­ற­போது வட­கி­ழக்கு இணைப்பு என்­பது பெரி­ய­தொரு விட­ய­மல்ல. 

இந்த இடத்தில் மற்­று­மொரு முக்­கி­ய­மான விட­யத்­தைக்­கூறக் கட­மைப்­பட்­டுள்ளேன். அமெ­ரிக்­காவும் சீனாவும் இந்­தி­யாவும் இலங்­கையில் நடத்தும் சித்து விளை­யாட்டில் தமிழ், முஸ்லிம் உறவை கூறு­ப­டுத்தி வைத்­தி­ருக்­கவே விரும்­பு­கின்­றார்கள். இதற்கு முதலில் தீர்வைக் காண வேண்டும்.  தமி­ழர்­களின் அர­சியல் மையம் வடக்­கிலும் முஸ்­லிம்­களின் அர­சியல் மையம் கிழக்­கிலும் இருக்­கின்­றது என்ற யாதார்த்­தத்தை அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும்.  வட­கி­ழக்கு இணைக்­கின்­ற­போது இந்­தி­யா­விலே முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற காப்­பீடு தொடர்­பான பிரச்­சினை போன்று ஒன்­றி­ணைந்த இந்த பூமியில் அவ்­வா­றான ஒரு நிலமை ஏற்­பட்டு விடுமோ என்ற சந்­தேகம் முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்­றது. இதற்கு இரு தரப்­பிற்கும் இடையில் உரிய பேச்­சு­வார்த்தை முறைமை காணப்­ப­டா­மையே கார­ண­மா­கின்­றது. 

என்­னு­டைய தந்­தையார் காலத்­தி­லி­ருந்த தமிழ், முஸ்லிம் உறவும் என்­னு­டைய காலத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் உறவும் என்­னு­டைய பிள்­ளை­க­ளு­டைய காலத்தில் இருக்­கப்­போ­கின்ற தமிழ், முஸ்லிம் உறவும் ஒரே நேர்­கோட்டில் இருப்­ப­தற்­காக பொறி­மு­றையை உரு­வாக்­க­வேண்டும் என்­பதை தமிழ்த் தரப்­பி­ன­ரிடம் வின­ய­மாக கேட்­டுக்­கொள்­கின்றேன். 

அளுத்­க­மவில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வரம் ஆட்­சி­யா­ளர்­களை மாற்­று­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சர்­வ­தேச சதி என்றே நான் கரு­து­கின்றேன். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ ஷவை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்­காக பல சர்­வ­தேச சதிகள் இருந்­தன என முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார். மகிந்த ராஜ­பக் ஷ புனி­த­மா­னவர் என நான் கரு­த­வில்லை. அவ்­வாறு இருக்­கையில் ஆட்­சிக்கு வந்­த­வர்­களும் முஸ்லிம்களுக்கான சட்டத்தில் கைவைத்தார்கள். அவ்வாறு கைவைப்பதற்காக காரணத்தின் பின்னணியைப் பார்க்கவேண்டியுள்ளது. 

முஸ்லிம்களுக்கான சட்டத்தில் கைவைக்கின்ற போது இளைஞர்கள் உணர்சிவப்படுவார்கள். அவர்களை அடுத்த கட்டம் தீவிரவாதிகளாக சித்திரிப்பதேயாகும்.  வடக்கு கிழக்கில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் ஒரு கலாசாரம் பிராந்திய சர்வதேச நிகழ்ச்சிநிரலோடு இணைந்து இடம்பெறுமாகவிருந்தால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும்.  இது திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. பல்வேறு சர்வதேச அரசியலுடன் தொடர்புபட்டுள்ளது. ஆகவே தமிழ் முஸ்லிம் தரப்பு இதனை நிதானமாகவும் பொறுப்பாகவும் கையாளவேண்டும் என்றார்.

2 comments:

  1. Replies
    1. Neenga tamila illa muslima illa tamilla irunthu marina chrisriyana ungada comments ellam parkiran muslimkel enda oru veruppakeva irukkirayal ithu oru phyco churchla ithellam solluvangale

      Delete

Powered by Blogger.