ஹிஜ்ரி 1439 முஹர்ரம், தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு
“புனித முஹர்ரம்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மேமன் ஹனபி பள்ளிவாசல் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் மௌலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறும்.
இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் மக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.
Post a Comment