மஹிந்தவுக்கு பைத்தியம் என்றே கூறவேண்டும் - எஸ்.பி.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு பைத்தியம் என்றே கூறவேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
வெள்ளவத்தையிலுள்ள கண் வைத்தியசாலை ஒன்றினை மேற்பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லின் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவின் வீட்டில் சுதந்திரக் கட்சி முக்கியஸ் தர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதுதான் சுதந்திரக் கட்சியின் தலை மைத்துவம் மாற்றப்படுமா இல்லையா என்பது குறித்து பேசப்பட்டது. அதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கட் சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் வழங்குவதாக கூறினார். அப்போதைய கட்சியின் செயலாளராகவிருந்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடத்தில் அவசரமாக தலைமைத்துவத்தை மாற்றும் பத்திரத்தில் கைச்சாத்திடுங்கள் என் றும் பணித்தார். எனவே தற்போது தன்னை யாரும் விலக்கவில்லை. தானே கட்சியின் தலைவர் என்று கூறுகின்றார். எனவே அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதோ என்று எனக்கு சந்தேகம் தோன்றுகின்றது. அதனால்தான் அவரே வழங்கிய தலைமைத்துவத்தை தற்போது இல்லை என்று மறுக் கின்றார் என்றார்.
Post a Comment