Header Ads



மஹிந்தவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் - எஸ்.பி.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனா ­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்­கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

வெள்­ள­வத்­தை­யி­லுள்ள கண் வைத்­தி­ய­சாலை ஒன்­றினை மேற்­பார்­வை­யிட்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த லின் பின்­னர் சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ­ஷவின் வீட்டில் சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ் தர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்றது. அதன்போதுதான் சுதந்­திரக் கட்­சியின் தலை மைத்­துவம் மாற்­ற­ப்ப­டுமா இல்லையா என்­பது குறித்து பேசப்­பட்­டது. அதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கட்­ சியின் தலை­மைத்­து­வத்தை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் வழங்­கு­வ­தாக கூறினார். அப்­போ­தைய கட்­சியின் செய­லா­ள­ரா­க­வி­ருந்த அமைச்சர் சுசில் பிரே­ம­்ஜ­யந்­த­வி­டத்தில் அவ­ச­ர­மாக தலைமைத்­து­வத்தை மாற்றும் பத்­தி­ரத்தில் கைச்சாத்­தி­டுங்கள் என் றும் பணித்தார். எனவே தற்­போது தன்னை யாரும் விலக்­க­வில்லை. தானே கட்­சியின் தலை­வர் என்று கூறு­கின்றார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் பிடித்­துள்­ளதோ என்று எனக்கு சந்­தேகம் தோன்­று­கின்­றது. அத­னால்தான் அவரே வழங்கிய தலை­மைத்­து­வ­த்தை தற்­போது இல்லை என்று மறு­க் கின்றார் என்றார்.

No comments

Powered by Blogger.