Header Ads



ஹஜ்ஜுப் பெருநாளுக்காகவே, முஸ்லிம் பாடசாலை விடுமுறைகளில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை (01) கருத்திற் கொண்டு, விடுமுறை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஓகஸ்ட் 18 (இன்று) முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 08 ஆம் திகதி வரை, இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துதுள்ளது.

No comments

Powered by Blogger.