பிரதேச சபை கேட்டு போராடிய, மனோவுக்கு வெற்றி கிட்டியது
-Mano Ganesan-
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.
சற்றுமுன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.
இன்று (23) காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் சற்று முன்னர் நாம் கையளித்தோம்.
Hon.Manokanesan, wish you all the best.this victory for your pure and humanitarian activities. Go forward the god will help you
ReplyDeleteGood
ReplyDelete