ரவி + மகேந்திரன் கையெழுத்திட்ட நாணயத்தாள்கள் இரத்தாகுமா..?
அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய நாணயத்தாள்களை பாவனையில் இருந்து நீக்குமாறு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகவும் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த போது வெளியிடப்பட்ட நாணயத்தாள்களின் எண்ணிக்கை குறித்தும் உடனடியாக தேடிப்பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Don't destroy the notes hand them over to the former minister and recover the printed cost from him
ReplyDelete