கொழும்பில் இரகசிய கமராக்கள்
வீதி விதிகளுக்கு முரணான வகையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விரைவில் பெருந்தெருக்களை அண்மித்ததாக ஆங்காங்கே இரகசிய கெமராக்களை பொருத்தும் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக கொழும்பு நகரை மையப்படுத்தி மேல்மாகாணத்தில் இத்திட்டம் ஆரம்பிக் கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் மற்றும் மக்கள் எண்ணிக்கைய அதிகம் காணப்படும் நகரமான கொழும்பு நகரிலேயே அதிகளவில் வீதி விதிமுறை மீறல்கள் இடம்பெறுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வீதிமுறை விதி மீறல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வேக வரையறை சட்டத்தினை நடைமுறைப்படுத்துகையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை மற்றும் வேக அளவீட்டு கருவிகளில் ஏற்பட்டிருந்த கோளாறுகளை தவிர்த்துக் கொள்வதற்கு தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கணிசமான அளவு லேசர் வேக வரையறை அளவீட்டு கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறே பெரும்பாலான பிரதான வீதிகள் பலவற்றில் வேக வரையறை சமிக்ஞை குறியீடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment