Header Ads



பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக, நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்­கான சட்­ட­மூல வரைபு பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சிறி தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளமை தொடர்பில் வெளி­யான தகவல் சம்­பந்­த­மாக வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

தேர்தல் நடத்­தாது காலம் தாழ்த்­து­கின்­றமை மற்றும் பாரா­ளு­மன்றில் கேட்­கப்­படும் கேள்­வி­க­ளுக்கு உரிய பதி­ல­ளிக்­காமை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். 

எனவே அந்­நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்­கான சட்­ட­மூல வரைபு பணி­களை தற்­போ­தைக்கு ஆரம்­பித்­துள்ளோம். மேலும் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்­க்கட்சி உறுப்­பினர் பலர் தற்­போ­தைக்கே ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

No comments

Powered by Blogger.