Header Ads



"மஹிந்த தரப்பினர் வெள்ளை ஆடை அணிந்தாலும், எவரும் தூய்மையானவர் கிடையாது"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் எவரும் தூய்மையானவர்கள் அல்ல என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கத்தின் அனைவருமே ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் தொடர்பில்  நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென   வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த தரப்பினர் வெள்ளை ஆடை அணிந்தாலும் எவரும் தூய்மையானவர் கிடையாது எனவும் அந்த மோசடிகாரர்கள் தொடர்பில் நீதிமன்றில் தகவல்கள் அம்பலமாகும் எனவும்  சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.