குழந்தை பிரசவித்த தாய் சில நிமிடங்களில், லிப்டில் உடல் துண்டாகி பலி
ஸ்பெயினில் தாய் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையை பிரசவித்து சில நிமிடங்களில் மருத்துவமனை லிப்ட் இயந்திரத்தில் உடல் இரண்டாக துண்டாடப்பட்டு மரணித்துள்ளார்.
தெற்கு ஸ்பெயினின் செவில்லேவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி கட்டிலில் வைத்து மற்றொரு மாடிக்கு அழைத்துச் செல்லப்படும்போதே ரோசியோ கோர்டஸ் நுனெஸ் என்ற பெண் இந்த பரிதாபத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.
இதன்போது நுனெஸை அழைத்துவந்த படுக்கையை முழுமையாக வெளியே எடுக்கும் முன்னர் இயந்திரக் கோளாறு காரணமாக லிப்ட் இயந்திரம் மேலே உயர்ந்துள்ளது. இதனால் அவரது பாதி உடல் லிப்டுக்குள் சிக்கியுள்ளது.
25 வயதான அந்த தாய்க்கு ஏற்கனவே நான்கு மற்றும் ஐந்து வயதுகளில் இரு குழந்தைகள் உள்ளன.
இந்த விபத்தில் பெற்ற குழந்தையும் அருகில் இருந்த போதும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது
இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment