ஹஜ்ஜுப் பெருநாளை, தீர்மானிக்கும் மாநாடு இன்று..!
புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. ஆகவே இன்றைய மாநாட்டின் போதே புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தினமும் தீர்மானிக்கப்படவுள்ளது.
புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 10 ஆம் நாள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆகவே பிறைக்குழுவின் இன்றைய தீர்மானங்களுக்கு அமைவாகவே ஹஜ்ஜுப் பெருநாள் தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
எனவே இன்று கூடும் பிறைக்குழு மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், பிறைக்குழு உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், மேமன், ஹனபி உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை பார்ப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழுவும் கொழும்பு பெரிய பள்ளிவாசலும் இணைந்து தமது பிரதிநிதிகளை நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடுசெய்துள்ளது. எனவே அப்பிரதிநிதிகள் வழங்கும் தகவலுக்கு அமைவாக துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தீர்மானிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment