முஸ்லிம்களில் 43 வீதமும், சிங்களவர்கள் 23 வீதமும், தமிழர்கள் 20 வீதமும் நோயினால் பாதிப்பு
இரசாயன சுவையூட்டப்பட்ட உணவுப் பாவனை இலங்கையில் அதிகரித்து வருகின்றது. இதனால் தொற்றா நோய்களின் அதிக தாக்கத்துக்கு எமது நாடு முகம்கொடுத்து வருகின்றதென சட்ட வைத்திய நிபுணர் கே.எஸ்.தஹநாயக தெரிவித்தார்.
Drஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப நிரந்தரமான தீர்வு எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய, சுகாதார துறை அதிகாரிகளுக்கு 'ஹெலசுவய' அமைப்பினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட சட்ட வைத்திய நிபுணர் தஹதநாயக அங்கு தொடர் ந்து விளக்கமளிக்கயில்,
கொழும்பு பிரதேசத்தில் 59 வீதமான நீரிழிவு நோயாளர்கள் காணப்படுவதாக வைத்திய ஆய்வுகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் 40 வீதமான மக்கள் ஈரலில் கொழுப்பு படிவினால் ஈரல்நோயாளர்களாகவும் உள்ளதாக இத்தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை 15 வீதமான குழந்தைகளுக்கு ஈரல் நோய் காணப்படுகின்றது. இந்நோயானது சிரோசிஸ், புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்களுக்கு வாய்ப்பை வழங்குகின்றது.
எமது முன்னோர்கள் விவசாயத்திற்கு எந்தவிதமான இரசாயன பயன்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த பராக்கிரம மன்னன் இரசாயன பயன்பாடின்றி மேற்கொண்ட விவசாயத்தின் மூலம் 6 கோடி மக்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்தார்.
வைத்திய ஆய்வுகளின்படி இலங்கையில் முஸ்லிம்களே அதிகமான நோய்களுக்கு உட்படுகின்றார்கள் என் றும், இது 43 சதவீதமாகக் காணப்படுவதுடன், சிங்களவர்களில் 23 சதவீதமும், தமிழர்கள் 20 வீதமும் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
திண்டு கெட்டவன்.
ReplyDeleteLet them eat more briyani and meats.we should cut meat and we should cut oil and sugar..it is our food habits that make them more unhealthy
ReplyDelete