வேடிக்கை பார்த்தவர்களை தாக்கிய யானை - ஒருவர் பலி, 3 பேர் காயம்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிச் சந்தியில் நேற்றுக் காலை 9 மணியளவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார். மூவர் காயமடைந்தனர்.
இப்பிரதேசத்துக்குள் திடீரென நுழைந்த காட்டு யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரே அதன் தாக்குதலுக்கு இலக்காகினர்.
இச் சம்பவத்தில் 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் பலத்த காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளனர். மற்றையவர் சிறு காயங்களுடன் பிரதேச வைத்தியசாலையில் சிகிசசை பெற்றார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சிப் பிரதேசத்துக்குள் முல்லைதீவுப் பகுதியிலிருந்து யானைகள் வந்து நடமாடுவதாக கிராமவாசிகள் பேசிக் கொண்டனர்
இந்நிலையில் அதே தினம் ஞாயிற இரவு 9 மணியளவில் ஆழியலை கடற்பகுதியில் யானை ஒன்று நடமாடுவதைக் கண்ட மீன் வாடிகளில் தங்கியிருந்து மீனவர்கள் கிராமவாசிகளுக்குத் தெரிவித்துள்ளனர். உடன் அங்கு திரண்ட கிராமவாசிகள் நெருப்புக் கொளுத்தி வெடி கொழுத்தி, மோட்டார் சைக்கிளில் ஒளிபாய்ச்சி ஆழியவளை மயானத்துக்கு அப்பால் விரட்டியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (திங்கள்) காலை வத்திராயன் ஊடாக மருதங்கேணிச் சந்தியை நோக்கி வந்த யானையை வேடிக்கை பார்க்க பலர் குழுமியபோது யானை தாக்குதலை மேற்கொண்டபோதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
Post a Comment