Header Ads



11 எம்.பி.க்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தயார் - தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கூறி வரும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வெலிகந்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி சென்றாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்க முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினால், இவர்கள் அரசாங்கத்துடன் இணையக் கூடும் என பேசப்படுகிறது.

No comments

Powered by Blogger.