இஸ்லாத்தை ஏற்றதால் RSS வெறியர்களினால் படுகொலையானவரின் குடும்பம் இஸ்லாத்திற்கு வந்தது
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் (32) என்பவர் ஃபைஸலாக பெயர் மாற்றம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சவுதி அரேபியா ரியாத்தில் வைத்து இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஃபைசல் குடும்பத்தை சேர்த 8 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். ஃபைசலின் இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது மச்சான் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
ஃபைசலின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஃபைசல் கொல்லப்படும் முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையில் ஃபைசலின் தாய் ஃபைசல் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இவரது குழந்தைகள் தற்போது இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஃபைசல் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அனில் குமாரை கொன்ற ஆர்எஸ்எஸ் கோழைகள் தற்போது எட்டு பேர் கொண்ட அவரது குடும்பத்தையும் கொல்வார்களோ? இவர்கள்தான் தேசப்பற்றை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். கத்தியை எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிவு என்பது போல் இந்துத்வா கோழைகளின் அழிவு அவர்கள் எடுத்த கத்தியாலேயே என்பதை வருங்கால வரலாறு உணர்த்தும்.
RSS kolaigal innum thodarkkoodadu India makkal Inda koalaigalukku nalla paadam katpikka veyndum aaamin
ReplyDeleteMasha Allah
ReplyDelete