Header Ads



IS பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், பொலிஸ் + விமானப்படையின் விளக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கப் போவதாக வெளியான வதந்திகள் குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸார் அப்படியான எந்த அறிக்கையும் தமக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் சதித்திட்டம் குறித்து ஆராய அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் சதித்திட்டம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் புலனாய்வுப் பிரிவினர் அப்படியான தகவல்களை வெற்றிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விமானப் படையின் பேச்சாளர் குறுப் கெப்டன் கியான் செனவிரட்ன, ஊடக செய்திகளை அறிந்ததாகவும் ஆனால் கருத்து கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இரத்மலானை விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.