Header Ads



அரச வைத்தியர்கள் புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பு - பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுப்பார்களா..?


மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுநாள் முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை,  மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் , புற்றுநோய் வைத்தியசாலை, முப்படை வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்தமுறை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றபோது, சில வைத்தியசாலைகளுக்குள் உட்புகுந்த பொதுமக்கள் வைத்தியர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.