Header Ads



என்னை இனவாதியாக, அடையாளப்படுத்த சூழ்ச்சி - அசாத் சாலி

தம்மை இனவாதியாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் தம்மை ஓர் இனவாதியாக அடையாளப்படுத்தும் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தாமோ தமது கட்சியோ இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து தாம் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.