Header Ads



குண்டர்களை நான் துண்டிவிடவில்லை - மறுக்கிறார் மரிக்கார்

ஊடகவியலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்தோரையும் தாக்கி ரொசான் சானக போன்றோரை கொலை செய்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிப்பதாக எஸ். எம். மரிக்கார் எம். பி. தெரிவித்தார்.

ஆவேசப்பட்ட மக்களே ஊழியர்களைத் தாக்கியதாகக் குறிப்பிட்ட அவர் இது பொது மக்களின் முதலாவது எழுச்சி எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, தற்பொழுது திட்டமிட்டு போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்பன நடத்தப்படுகின்றன.

கடந்த காலத்தில் 1100 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் வகையிலே இவை முன்னெடுக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்வு இதனால் பாதிக்கப்படுகிறது.

குண்டர்களை துண்டிவிட்டு நான் தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் வெள்ளம் வந்தாலும் குப்பைமேடு சரிந்தாலும், இவ்வாறு மக்கள் ஆவேசப்பட்டாலும் என் மீது தான் விரல் நீட்டப்படுகிறது. குண்டர்களல்ல ஆவேசமடைந்த பொதுமக்களே தாக்குதல் நடத்தினார்கள். இனிமேல் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இது உதாரணமாகும்.

2 comments:

  1. MP Marikkar,
    What is your response to these evidences presented in parliament by JVP Leader Anura Kumara Dissanayake? Please browse the "youtube" link below.
    "The Muslim Voice".
    https://www.youtube.com/watch?list=UUmTcA0rOwOPCaKvfsXFeZ8w&v=mQ-sxQxiQ4g

    ReplyDelete
  2. If Marrikar has led the civilians to teach a lesson to those traitors and bastards, who distributed civilian life, I wholeheartedly appreciate him. We need you everywhere Mr Marrikar. Well done. Good job.

    ReplyDelete

Powered by Blogger.