Header Ads



"எங்களுடன் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக குளித்த, மகிந்தவின் தலை கெட்டுப் போய்விட்டது"

நாட்டில் 30 ஆண்டுகளாக நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலை கெட்டுப் போனதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நொச்சிப்பொத்தானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 30 ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், எங்களது தலைவரது தலை கெட்டுப் போனது.

தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க எண்ணினார். 18வது அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக எண்ணினார்.

தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து தமது குடும்பம் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அப்படி எண்ணி செயற்பட்டார்.

மகிந்த ராஜபக்ச எங்களுடன் ஒன்றாக தண்ணீர் தொட்டியில் குளித்தவர். நாங்கள் அவரை நேசித்தோம். அவர் இல்லாமல் போனார்.

செல்வந்தர்கள் அவரை பறித்துக்கொண்டனர் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.