Header Ads



முஸ்லிம்களையும், கிறிஸ்த்தவர்களையும் மோதவிட சிங்­கள ராவய முயற்சி

சம்­பந்­தனும், விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்து கலா­சார ஆடையை அணிந்­து­கொண்டு குங்­கும பொட்டு வைத்­தி­ருப்­பதால் மாத்­திரம் இந்­து­வா­கி­விட முடி­யாது. அவர்கள் தமிழ் மக்­களின் பிர­திநி­திகள் என்ற வகையில் தனி நாட்டு கோரிக்­கையை கை­விட்டு தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வர வேண்டும்  என  சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் இந்­தே­கந்தே சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.

ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ராம விஹா­ரையில் இடம்­பெற்ற சத்­தர்­மா­ரா­ஜித விஹாரையில் இடம்­பெற்ற பொது­பலசேனா அமைப்பின்  ஊட­கவி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மன்னார் மாவட்­டத்தில் சின்ன காரி­காளன் மற்றும் பெரிய கரிசல் என்று இரு பிர­தே­சங்கள் உள்­ளன. அவற்றின் சின்ன கரிசல்ன் பகு­தியில் தமிழ் மக்­களும் பெரிய கரிசல் பகு­தியில் முஸ்லிம் மக்­களும் வாழ்ந்­தனர்.

யுத்­த­ கா­லத்தின் போது இந்த மக்கள் இடம்­பெ­யர்ந்து சென்­றி­ருந்தால் இவர்­களின் காணிகள் கைவி­டப்­பட்­டி­ருந்­தன. எவ்­வா­றா­யினும் பெரிய கரி­காளன் பகு­தியில் வாழ்ந்த முஸ்லிம் சமூ­கத்­தினர் முன்பே மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது சிறிய கரிசல் பகு­தியில் தமிழ் மக்கள் குடி­யேற முடி­யாது என மன்னார் நீதி­மன்­றமும் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. அதனால் தற்­ச­மயம் அந்த பகு­தி­களில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது காணி­களை சுற்றி வேலி­யிட்­டுள்­ளனர்.

அதனை நேற்­றைய தினம் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் சகோ­தரர் ஒருவர் தலை­மை­யினால் குழு வேலி­களை தகர்த்­தெ­றிந்­து­விட்டு வீடொன்றின் மீது தீ வைத்து பெரும் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனை கிறிஸ்­த­வ­ ஆ­லயம்  ஒன்றின் பாதி­ரியார் ஒருவர் எமக்கு அறி­வித்தார். இன்று தமிழ் மக்­களை  பிர­தி­நி­தி­த்து­வப்­ப­டுத்தும்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் மெளனம் சாதிப்­பதை விடுத்து­விட்டு இந்த பிரச்­சி­னைகள் குறித்து அவ­தானம் செலுத்த வேண்டும்.

இல்­லா­விடின் தமிழ்,சிங்­கள மக்­க­ளுக்கு இந்த நாடு இல்­லாமல் போய்­விடும். எனவே இன­வாத சக்­தி­களால் தாக்­கு­த­லுக்கு இலக்கான தமிழ் மக்­களை காப்­பாற்ற தமிழ் அர­சி­யல் ­வா­திகள் முன்­வர வேண்டும். 

விக்­கி­னேஸ்­வரன்  இந்து சம­யத்­த­வர்கள் அணியும் கலா­சார ஆடை­யினை அணிந்­து கொண்­டி­ருப்­ப­தாலும் குங்­கும பொட்டு வைத்­தி­ருப்­ப­தாலும் முழு­மை­யான இந்­து­வா­கி­வி­டப்­போ­வ­தில்லை. மறுபுறத்தில் சம்பந்தனும் அவ்வாறுதான்.

எனவே இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தனிநாடு கோரிக்கை விடுத்துவிட்டு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களே தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டியவர்களாவர்.

No comments

Powered by Blogger.