Header Ads



பர்­தா­வுடன் பரீட்சை எழுதவிடுங்கள் - உருக்கமான வேண்டுகோள்


எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி க.பொ.த. (உ/த)  பரீட்சை ஆரம்­ப­மா­கின்­றது. முஸ்லிம் மாண­விகள் தமது கலா­சார ஆடை­யான பர்­தா­வுடன் பரீட்சை மண்­ட­பத்­திற்குச் சென்று பரீட்சை எழு­து­வதில் எவ்­வித இடை­யூ­று­களும் விளை­விக்க வேண்டாம் என பரீட்சைக் கட­மை­களில் ஈடு­படும் அதி­கா­ரி­க­ளிடம் பெற்­றோர்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். 

கடந்த காலங்­களில் பர்தா அணிந்து பரீட்சை எழுத வந்த மாண­வர்கள் பர்­தா­வோடு பரீட்சை எழு­த­வி­டாமல் தடுக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பதி­வாகி இருந்­தன. இதனால் மாண­வர்கள் உள ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்டு பெறு­பே­று­க­ளிலும் வீழ்ச்சி ஏற்­பட்­டது. 

பெற்றோர் உள்­ளிட்ட கல்விச் சமூகம் தமது விச­னத்­தையும் கண்­ட­னத்­தையும் தெரி­வித்து இருந்­தது. முஸ்லிம் கலா­சார ஆடை­யோடு பரீட்சை எழுத முடியும் என பரீட்சை தொடர்­பான விளக்கக் கூட்­டங்­களின் போது தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போதும் சுற்­ற­றிக்­கைகள் காணப்­ப­டு­கின்­ற போதும் ஒரு சில பரீட்சை மண்­ட­பங்­களில் கட­மை­பு­ரி­கின்ற அதி­கா­ரிகள் தான்­தோன்றித் தன­மாக இன­வாத மனப் போக்கில் செயற்­ப­டு­வ­தனால் மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். 

எனவே இது விட­யத்தில் இலங்கை பரீட்சை திணைக்­களம் கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடு­க்கின்­றனர். எதிர்­வரும் எட்டாம் திகதி முதல் முப்பத்தோராம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. vi

No comments

Powered by Blogger.