Header Ads



உண­வில் குழம்பு இல்லை - மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி, மனைவி மகள் படுகாயம்


மஹ­வெல பிர­தே­சத்தில் இரவு நேர உண­வுக்­காக குழம்பு தயா­ரித்து வைத்­தி­ராத கார­ணத்தால் கோப­ம­டைந்த நபர்  ஒருவர் அவ­ரது மனைவி, மகள் மற்றும் மாமியார் மீது நேற்­று­முன்­தினம் இரவு கூரிய ஆயு­தத்தால் தாக்­கி­யதில் மாமியார் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக மஹா­வெல பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இத்­தாக்­கு­தலில் சந்­தே­க­ந­பரின் மனைவி (39) மற்றும் மகள் (20) படு­கா­ய­ம­டைந்த நிலையில் மாத்­தளை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில், தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

நேற்று முன்­தினம் இரவு 8 மணி­ய­ளவில் சந்­தே­க­நபர் அதி­க­ள­வாக மது அருந்தி வீட்­டுக்கு வந்து மனை­வியை வீட்­டுக்கு வெளியில் அழைத்துச் சென்று, சண்­டை­யிட்டு அவரை கத்­தியால் குத்­தி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து, தனது மகளின் அலறல் சத்தம் அவ­ரது அம்மா வீட்­டி­லி­ருந்து வெளியில் வந்­த­போது குறித்த நபர் அவர்­மீதும் கத்­திக்­குத்து நடத்­தி­யுள்ளார். இச்­சம்­ப­வங்­களை கண்ட அவ­ரது மகள், கத்­திக்­குத்தை தடுப்­ப­தற்­காக வந்த வேளையில் சந்­தே­நபர் அவர் மீது­தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இச்­சம்­ப­வத்தை நேரில் அவ­தா­னித்த பெண்­ணொ­ருவர் தெரி­விக்­கையில், தான் சம்­ப­வத்தை கண்டு, அவரை தடுப்­ப­தற்­காக தனது கைக்­கு­ழந்­தை­யுடன் சம்­பவ இடத்­துக்கு சென்­ற­போது, தனது கழுத்தில் சந்­தே­க­நபர் மூன்று முறை கத்­தியை கழுத்தில் வைத்து. ' உன்­னையும் கொல்ல வேண்­டுமா? " என கேட்­ட­தாக தெரி­வித்தார்.

கடந்த 14 ஆம் திக­தியே சந்­தே­க­ந­பரின் மனை­வி­யான கத்­திக்­குத்­துக்கு இலக்கான பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.