Header Ads



நாட்­டுக்கு சேவை செய்­ய­வி­ருந்த எமது பிள்­ளை­களை, பணத்­துக்­காக கடத்தினர் - கண்ணீர் விட்­ட­ழுத உற­வி­னர்கள்


படித்து நாட்­டுக்கு சேவை செய்­ய­வி­ருந்த எமது பிள்­ளை­களை பணத்­துக்­காக கடத்திச் சென்­றனர். எம்­மிடம் கோடிக் கணக்கில் கப்பம் கோரினர். இது­வரை அவர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் இல்லை. கடற்­ப­டை­யி­னரே இந்த கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பதை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடா­கவே நாம் அறிந்தோம்.  

தற்­போது சில அர­சி­யல்­வா­திகள் எமது பிள்­ளை­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்க முற்­ப­டு­கின்­றனர். 8 வரு­டங்­க­ளாக நாம் எமது பிள்­ளை­களை தேடு­கின்றோம். அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விட­யத்தில் அர­சியல் சாயம் பூசாது, எமக்­கான நியா­யத்தைப் பெற்­றுத்­தா­ருங்கள் என கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் உற­வி­னர்கள் நேற்று கண்ணீர் விட்­ட­ழுது வேண்­டுகோள் விடுத்­தனர்.  

கொழும்பு – நிப்பொன் ஹோட்­டலில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்­தியே அவர்கள் அர­சாங்­கத்­திடம் இந்த வேண்­டு­கோளை விடுத்­த­துடன் குற்றப் புல­ன­யவுப் பிரி­வி­ன­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்ல அனு­ம­திக்­கு­மாறும் அவர்­க­ளுக்கு இடை­யூறு செய்யும் வகை­யி­லான அர­சியல் தலை­யீ­டு­களை செய்ய வேண்டாம் எனவும் வேண்­டுகோள் விடுத்­தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் விடு­தலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கு மறுப்பு தெரி­விக்கும் வித­மாக காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பெற்­றோர்கள் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இதில் கலந்­து­கொண்டி பேசும் போதே கண்­ணீ­ருடன் குறித்த உற­வுகள் மேற்­படி விட­யத்தை ஊடக்ங்­க­ளி­உடம் வெளிப்­ப­டுத்­தினர்.

காணாமல் ஆக்­கப்­பட்ட ரஜீவ் நாக­நா­தனின் தாய் சரோ­ஜினி நாக­நாதன் தெரி­விக்­கையில்,  2008 செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்­தப்­பட்டார். எனக்கு இருந்­தது ஒரே ஒரு மகன். உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்­ல­வி­ருந்த நிலையில் அவன் கடத்­தப்­பட்டான். தில­கேஸ்­வரன், டிலான் ஆகிய தனது இரு நண்­பர்­க­ளுடன் அவன் வீட்­டி­லி­ருந்து காரில் சென்ற போதே  தெஹி­வ­ளையில் வைத்து கடத்­தப்­பட்­டுள்ளான்.

 கடற்­ப­டை­யி­னரால் அவன் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த போது தொலை­பேசி ஊடாக எங்­க­ளுடன் கதைத்தும் உள்ளார்.

அவர்கள் பேசும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு நாமே ரீலோட்டும் செய்­துள்ளோம். மகனை விடு­விக்க என்­னிடம் ஒரு கோடி ரூப கப்பம் கோரப்­பட்­டது. நான் 75 இலட்சம் ரூபா­வுடன்  நாரம்­ம­லைக்கு செல்ல முற்­பட்ட போது அப்­போ­தைய அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமைய நான் அங்கு  செல்லவில்லை.

 குறித்த அமைச்சர்  கடற்படை தளபதி கரன்னா கொடவுடன் பேசி, எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை என்றார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.