Header Ads



பொறுத்தமான நேரத்தில் வெளிவரும் ஞானசாரர், தகுந்த பாடத்தைப் புகட்டுவார்...

நாட்டில் தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றார் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

=பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது என்ன நடைபெறுகின்றது என்பதை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றார்.

நாட்டில் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேரர் வெளியே வந்து குறிப்பிட்ட நபர்களுக்குரிய பாடத்தைப் புகட்டுவார்.

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஞானசார தேரர் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலைகளுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொறுத்தமான நேரத்தில் அவர் வெளியேவருவார். அப்பொழுது குறிப்பிட்ட நபர்களுக்குரிய பாடத்தைப் புகட்டுவார் என்றார்.

No comments

Powered by Blogger.