Header Ads



சுதந்திர கட்சியை, மகிந்த கைப்பற்றுவாரா..? அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படை எதிர்ப்பு சம்பந்தமான தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்குதமாறு உத்தரவிடக் கோரி அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு சட்டரீதியான அடிப்படைகள் மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்தும் நடத்தி செல்ல முடியாது எனக் கூறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அடிப்படை எதிர்ப்பை முன்வைத்தார்.

இதனடிப்படையில், அடிப்படை எதிர்ப்பு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.