Header Ads



விசாரணைக்கு செல்லாத, ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 9 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் வர முடியாதென ஷிரந்தி ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அவர் தனது சட்டத்தரணி ஊடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்சவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பெற ஷிரந்தி அழைக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.