Header Ads



கிழக்கு மாகாண ஆளுனராக லியனகே..?

கிழக்கு மாகாண ஆளுனராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான லியனகே தற்போது கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

கிழக்கு மாகாண ஆளுனராக கடமையாற்றி வந்த ஒஸ்டின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எஸ்.பி லியனகேவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கட்டாரில் கடமையாற்றி வரும் லியனகே இன்றைய தினம் நாடு திரும்பியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.