Header Ads



பாகிஸ்தான் - பர்மாவில் இருந்து அரிசி இறக்குமதிக்கு அனுமதி

இலங்கையின் அரிசித்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசியையும் பர்மாவிலிருந்து 30000 மெற்றிக் தொன் அரிசியையும் இறக்குமதி செய்வதற்கு அந்த நாடுகளின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் தெரிவித்தார். 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்கு ஹெட்டி தலைமையில் பாகிஸ்தான் மற்றும் பர்மாவுக்குச் சென்ற தூதுக்குழு அந்த நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு  நாடு திரும்பியுள்ள நிலையில் அவர்களின் விஜயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.