Header Ads



'அரசாங்கத்தை நடத்துபவர்களின் கிரகநிலைக்கு ஏற்ப, விபத்துகள் இடம்பெறுபவை அல்ல'

நாட்டினுள் இடம்பெறும் சிற்சில விபத்துகள் அரசாங்கத்தை நடத்திச் செல்லும் நபர்களின் கிரகநிலைக்கு ஏற்ப இடம்பெறுபவை அல்ல. 

காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலேயே அவை சம்பவிப்பதாகவும், உலகமே இந்த நிலைமைக்கு பொதுவாக முகம் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

சுற்றுச் சூழல் சவால்களை தடுக்க முடியாத போதும், இயற்கைக்கு ஏற்ப நாம் இசைவாக்கம் அடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

ரத்தினபுரி பொது மருத்துவமனையில் சிறார் நோயாளர் விடுதி, இரத்த வங்கி, ரத்த கசிவு வடிகட்டல் பிரிவு மற்றும் எக்‌ஸ் கதிர் பிரிவு என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை வௌியிட்டார். 

பிரதேச தனவந்தர்கள் மற்றும் அமெரிக்க இனத்தவரான லுவிஸ் அலன் என்பவரின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பின் ஊடாக குறித்த கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுககப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.