Header Ads



யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 9 இல் தேசிய மீலாத் விழா - ஜனாதிபதி, பிரதமர் அதீதிகளாக பங்கேற்பு

கடந்த 22ம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். ஏம். மலிக் ஆலோசகர் முயினுத்தீன் ஆகியோர் தலைமையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் 2017ம் ஆண்டுக்குரிய தேசிய மீலாத் விழாவிற்கான வழி நடாத்துக் குழுவின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்திற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களினதும் மீலாத் வழி நடாத்துக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் பிரதான மீலாத் விழா நிகழ்வு தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் இப் பிரதான விழாவினை எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடாத்துவது என்றும் பிரதம அதிதியாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநாயக்காவையும் விஷேட அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவையும் கௌரவ அதிதிகளாக வடமாகாண சபை முதலமைச்சர் ஊ.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் முக்கிய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் நாடாளாவிய ரீதியில் பேராளர்களையும் அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.