Header Ads



ரவி தாக்கல்செய்த 3 அமைச்சரவை பத்திரங்களை, நிராகரித்த ஜனாதிபதி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் நேற்று -25- தாக்கல் செய்த மூன்று அமைச்சரவை பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

விசும்பாயவை தனது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்தார்.

விசும்பாய இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அரச தலைவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தனது ஊழியர் குழுவின் பிரதான அதிகாரியை நியமிக்கவும் அமைச்சர் கருணாநாயக்க அனுமதி கோரியிருந்தார். இதனையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே ஊழியர்கள் தலைமை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தவிர இந்தியாவில் உள்ள இலங்கை யாத்திரீகர்ளின் சபை சம்பந்தமான முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.