Header Ads



பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்தி, விருந்துவைக்கும் முறை - 3 பெண்களுக்கு ஏற்பட்ட பயங்கரம்

இலங்கையில் தற்போது பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் விருந்து வைக்கும் நடைமுறை ஒன்று தீவிரம் அடைந்துள்ளது.

இவ்வாறு நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு சென்ற மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தை நிறைவு செய்து வீடு திரும்ப ஆயத்தமாகிய மூன்று பெண்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளனர்.

இதன்போது இடையில் இன்னுமொரு இளைஞர் அந்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார். இந்நிலையில் முச்சக்கர வண்டி வேறு திசையை நோக்கி செல்வதனை அவதானித்த பெண் ஒருவர் அதில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். .

ஏனைய இரண்டு பெண்களை காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு பெண்களும் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இந்த 3 பெண்களும் விருந்திற்கு சென்றுள்ளனர். 23 முதல் 25 வயதுடைய இந்த பெண்கள் ஹங்குரன்கெத்த மற்றும் பொந்தகான பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

பேஸ்புக் ஊடாக ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்று நேற்று நடத்தப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த விருந்து நிகழ்வில் போதைப்பொருள் பயன்படுத்தியதனால் பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த விருந்து நிகழ்வில் ஆயிரத்துக்கும் முற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் பேஸ்புக் ஊடாக நட்பு வட்டத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2

ஹோட்டலுக்குள் 1000 இளைஞர், யுவதிகள் உல்லாசம்? சுற்றிவளைத்த கிராம மக்களால் பதற்றம்

ஜாஎல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் பதற்றமான நிலை காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இளைஞர்கள், யுவதிகள் இணைந்து இன்று நடத்திய விருந்து நிகழ்வொன்றுக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிப்புறத்தில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் சுமார் 1000 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் கர்ப்பிணி தாயார் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

எனினும் இது போதைப்பொருள் பயன்படுத்தும் விருந்து எனவும், போதை மாத்திரைகள் அங்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறி கிராம மக்கள் குற்றம் சுமத்தியதோடு அந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது விருந்திற்கு வந்த இளைஞர் யுவதிகள் சிலர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்துள்ளனர். எனினும் அந்த குழுவினருக்குள் எவ்வித பதற்றமான தன்மை ஒன்றும் காணப்படவில்லை.

எப்படியிருப்பினும் இந்த நாட்களில் பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் விருந்துகளின் போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பலர் கலந்து கொள்வதாக இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த இளைஞர்களிடம் வினவிய போது அவர்கள் அது உண்மை என உறுதி செய்துள்ளனர்.

எப்படியிருப்பினும் தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.