Header Ads



35 வயதிற்கு குறைவானவர்களுக்கு, ஆட்டோ லைசன்ஸ் இல்லை

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

பயணிகள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகமாக முச்சக்கரவண்டிகளையே பயன்படுத்துகின்றார்கள். இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளது.

தற்போது பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பு கருதி புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நாட்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.