பசில் - நாமல்உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக 12 வழக்குகள்
பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் மேல் நீதிமன்றங்களில் 12 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை நிதிக் குற்றப் புலனய் வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட விசாரணைகளிலேயே இந்த 12 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நிறைவடைந்து கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மேலும் 131 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிதிக் குற்றங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் அக்குற்றங்கள் வெளிநாடுகள் ஊடாகவும் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சான்றுகள் உள்ளதால் 25 நாடுகளுடன் அந்தியோன்ய அடிப்படையில் தகவல்களைப் பெற்று விசாரணைகள் நடாத்தப்ப்ட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் இதுவரை நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவினரால் 56 சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளதாகவும் 10 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவினர் இதுவரை செய்துள்ள விசாரணைகள் காரணமாக 237.5 மில்லியன் ரூபா சொத்துக்கள் அரச உடமையககப்ப்ட்டுள்ளதுடன் மேலும் 400 மில்லியன் சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
Post a Comment