Header Ads



IS அனுசரணையுடன் ஞானசாரரை கொல்ல திட்டம், ஒத்திகையும் நடத்ததாம்..!

- ARA.Fareel-

ஐ.எஸ். அமைப்பின் அனு­ச­ர­ணை­யுடன் அதே­பா­ணி­யி­லான குழு­வொன்று பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கொலை செய்­வ­தற்கு திட்டம் தீட்­டி­யுள்­ளது. அதற்­கான ஒத்­தி­கையும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்தின் பின்­ன­ணியில் முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரும் அவ­ரது சகோ­த­ரரும் இருக்­கி­றார்கள். இத­னா­லேயே ஞான­சார தேரர் தலை­ம­றை­வாக இருக்­கிறார். 

கொலைத் திட்டம் தொடர்­பாக பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளோம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­தது. 

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­பல சேனாவின் செய­ல­க­மான பன்­ச­லையில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், 

ஞான­சா­ரரை கொலை செய்­வ­தற்­கான சதித்­திட்டம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்­குழு மற்றும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வி­டமும் முறை­யிட்­டுள்ளோம். இம்­மு­றைப்­பாடு தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர். ஞான­சார தேரர் வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கும்­போது அல்­லது மேடை­யேறும் போது கொலை செய்­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஞான­சார தேரரின் சார­திக்கு நாம் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்ளோம். ஞான­சார தேர­ருக்கு ஏதும் நடந்தால் அதற்கு அர­சாங்­கமே பொறுப்புக் கூற­வேண்டும். 

நாம் எமது தாய்­நாட்­டுக்கு ஆத­ர­வா­ன­வர்கள். ஞான­சார  தேரர் ஒரு­வேளை கொலை செய்­யப்­பட்டால் நாட்டில் பாரிய விளை­வுகள் ஏற்­ப­டலாம் என்று நாம் பயப்­ப­டு­கிறோம். பொலி­ஸாரின் உத­வி­யுடன் அவர் கொலை செய்­யப்­ப­டலாம் என சந்­தே­கிக்­கின்றோம். ஏனென்றால், குரு­நா­கலில் பொலிஸார் பிடி­வி­றாந்து எது­வு­மில்­லா­மலே அவரைக் கைது செய்ய முயற்­சித்­தனர்.

ஞான­சார தேரர் திங்­கட்­கி­ழமை பொலிஸில் வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தற்கு வருகை தரு­வ­தாக கூறி­யி­ருந்தும் அதற்­கு­முன்பு குரு­நா­கலில் அவரைக் கைது செய்ய முயற்­சித்­தனர். இதனால் பொலிஸ் மீது எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. ஞான­சார தேரர் மறை­வாக இருக்­கிறார். அவர் எங்­கி­ருக்­கிறார் என்று எம்மால் கூற­மு­டி­யாது. ஆனால் அவர் இன்னும் கொலை செய்­யப்­ப­ட­வில்லை என்று மாத்­தி­ரமே கூற­மு­டியும்.

ஞான­சார தேர­ருக்கு அளுத்­கம சம்­ப­வத்­துடன் தொடர்­பி­ருக்­கி­றது  என்று தொடர்ச்­சி­யாகக் கூறி­வ­ரு­கி­றார்கள். ஆனால் நாம் அவ­ருக்கு தொடர்­பில்லை என்று கூறு­கிறோம். இச்­சம்­பவம் தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கும்­படி நாம் தொடர்ந்து கூறினோம். ஆனால் எதுவும் நடக்­க­வில்லை.இந்தக் குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க முடி­யாது என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும். 

நாட்டில் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கவும் ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பவும் தமி­ழர்கள், இந்து மக்கள் எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக போராட கிறிஸ்­தவ மக்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் நாம் அழைக்­கிறோம். சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் எம்மை ஆத­ரிக்­கி­றார்கள். அவர்­க­ளது பிரச்­சி­னை­களை எம்­மிடம் முன்­வைக்­கி­றார்கள். ஆனால் எம்­முடன் ஒரு மேடையில் அமர்­வ­தற்குப் பயப்­ப­டு­கி­றார்கள். அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களால் அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும் என்­ப­த­னா­லேயே பயப்­ப­டு­கி­றார்கள். 

ஞான­சார தேரரை கைது செய்­யும்­படி முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் அசாத்­சாலி போன்­ற­வர்கள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு அழுத்தம் கொடுக்­கி­றார்கள். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அர­சியல் லாபம் கருதி அவர்கள் கூறு­வது போன்று செயற்­ப­டு­கின்­றார்கள். ஞான­சார தேரரை கைது செய்­யா­விட்டால் நாம் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்ள வேண்­டி­யேற்­படும் என்று பய­மு­றுத்­து­கி­றார்கள். அசாத்­சாலி, நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ இதன் பின்­ன­ணியில் இருப்­ப­தாக பொய்ப் பிர­சாரம் செய்­கிறார். 

தொட­ராக ஆட்சி செய்­து­வந்த அர­சாங்­கங்­களின் அர­சியல் சுய­நலம் கார­ண­மா­கவே நாட்டில் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்­ளன. 2002 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிக்கா அம்­மையார் பௌத்த பிர­தே­சங்கள் தொல்­பொ­ருட்கள் ஆக்­கி­ர­மிப்­புகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்­பிக்க ஆணைக்குழுவொன்றினை நியமித்திருந்தார்.

அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இன்று பிரச்சினைகள் உருவாகியிருக்காது. அந்த அறிக்கையில் கூரகல, முகுதுவிகாரை, செவனகல, தீகவாபி பிரதேசங்களை  முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தர்கள் மதம் மாற்றப்படுகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாட்டில் இன்றைய பிரச்சினைகளுக்கு பொதுபல சேனா காரணம் என்று கூறமுடியாது என்றார்.

3 comments:

  1. பல்லால் கிழிக்கிற பனங்கிழங்கு

    ReplyDelete
  2. உங்க காமடிக்கு ஒரு அளவே இல்லையாடா....?

    ReplyDelete
  3. Isற்கு எதற்கு ஒத்திகை அவர்கள்தான் பெரிய பயங்கரவாதிகளாச்சே

    ReplyDelete

Powered by Blogger.