Header Ads



ஓட்டமாவடியில் IS பாவிக்கும் மாத்திரையாம், ஷிஆக்கள் கிளப்பும் புரளி..!

ஓட்டமாவடி மீராவோடையில் அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா அமைப்பின்) கல்வி கலாச்சார நிலையம் மீது தாக்குதலை நடத்தியவர்கள். எங்களை கொல்லவேண்டும் என்பதற்கு திட்டமிட்டிருக்கின்றார்கள் ஐஎஸ்ஐஎஸ் பாவிக்கின்ற மாத்திரையொன்று அண்மையில் காத்தான்குடியில் பிடிக்கப்பட்டிருந்தது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூர செயலுக்கு பாவிக்கும் மாத்திரையை இவர்களும் பாவித்து இருப்பார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது என அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா அமைப்பின்) கல்வி கலாச்சார நிலையத்தின் தலைவர் அஸ்ரப் அலியர் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிருகின்ற வேளையில் தங்களுக்கு நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

எங்களைத் தாக்கியவர்கள் யாரும் நிதானத்துடன் இல்லை. அவர்கள் அனைவரும் ஆட்டத்துடன் இருந்தார்கள். இவர்களிடம் ஆயுதம் இருந்திருந்தால் அந்த இடத்திலே சுட்டுத்தள்ளியிருப்பார்கள் என தோன்றுகின்றது.

சுமார் 300 தொடக்கம் 400 வரை கலாச்சார நிலையத்திற்குள் வந்தார்கள். இவர்கள் கடும்போக்குடைய வாதிகளின் தாக்குதலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரதான வாயிற் கதவை மூடிவிட்டு வெளியேறினோம்.

கல், தடி மற்றும் கூரான ஆயுதங்களுடன் வந்து தாக்கினார்கள்.எங்கள் கலாச்சார நிலையத்திலுள்ள பல லட்சக்கணக்கான உடமைகள் உடைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இதே போன்றதான தாக்குதல் அண்மையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து எங்களுக்கும் நடக்ககூடாது என்பதற்கான பாதுகாப்பு பிரிவினர்களிடம் முன்கூட்டியே அறிவித்திருந்தோம்.

சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் பொலிசாருக்கு உடன் அழைப்பு எடுத்திருந்தோம், ஆனால் பொலிசார் வழமைபோல் காலதாமத்துடன் வந்தனர். இதனால் பல லட்சம் பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நாட்டில் மீண்டும் ஒரு இனக் கலவரத்தை தூண்டக்கூடிய செயற்பாடக அமையப்பெற்றுள்ளது.

தற்பொழுது ஊடகங்களில் பொது மக்கள் குறித்த கலாச்சார நிலையத்தை தாக்கியதாக செய்திகளைப் பரப்புகின்றார்கள். நிச்சயமாக பொதுமக்களுக்கும் தாக்குதலுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை.

அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா அமைப்பின்) கல்வி கலாச்சார நிலையத்தை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. அதானே சம்பிக்க ஏன் IS இலங்கையில் உள்ளதாக கூறுவது? எல்லாம் இந்த ஷீயா நாய்களின் போட்டுக் கொடுப்புக்கள்தான்!!!இவர்கள் நுழைவது தொடர்பில் மேலும் அவதானம் தேவை!!!

    ReplyDelete
  2. Stupid this siya making problems everywhere in the world we have to stop them from the beginning..

    ReplyDelete
  3. இவர் ஒரு ஆசிரியரா? ஏனெனில் ஆசிரியர் என்பவர் எப்போதும் நல்லதையே சிந்தித்து சிறந்ததையே செய்பவர்கள் என்பது எனது அனுமானம்.
    ஆனால் சாதாரண இஸ்லாமிய அறிவே சியா முரண்பாடான கொள்கை என்பதை அறிந்து கொள்ள போதுமானது.
    பணம், புகழின் மீது கொண்ட அதீத பற்று இவரது கண்ணை மறைத்திருக்க வேண்டும். பணத்திற்காக தாய்,மனைவி, மகள் , சகோதரிகளைக் கூட ........(வேண்டாம்)
    எனவே இவரோடு அள்ளுப்பட்டு செல்லுகின்ற பாமர மக்களை இவரது பணப் பசியிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.