Header Ads



நீதிமன்றத்தில் ஆஜராக ஞானசாரா தயார், ஆனால் ஒரு நிபந்தனை


பாதுகாப்பினை உறுதி செய்தால் தமது அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாவார் என பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொதுபல சேனா இயக்கத்தின் பிரதிநிதிகள் இதனைத் கூறியுள்ளனர்.

எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தத் தயார் என தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரர் தொடர்பிலான அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டால் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுவார் என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களினால் இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குப்பிடத்தக்கது.

1 comment:

  1. பாழுட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து காத்த கிளி நாளை வரும் கச்சேரிக்கு.

    ReplyDelete

Powered by Blogger.