Header Ads



யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில், இடஒதுக்கீடு செய்ய கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தின் சில அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோரியுள்ளதாக அரசியல் சாசன திருத்தங்கள் குறித்த மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் குறித்த பரிந்துரைகள் கோரப்பட்ட போது ஜாதிய அடிப்படையிலான விடயங்கள் பகிரங்கமாக பேசப்பட்ட ஒரே மாகாணம் வடக்கு மாகாணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இன ஒடுக்குமுறைகள் காணப்படுவதாகவும் இதனால் இவ்வாறு ஒதுக்கீடு செய்பய்பட வேண்டுமெனவும் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி  கோரியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக அடிப்படையிலான பிரச்சினைகள் முரண்பாடுகள் காணப்படுவதாக பலர் குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

7 comments:

  1. வரதராஜ பெருமாள் 25வருடம் இந்தியாவில் வாழ்ந்தவர்.அங்கு அரசியல்வாதிகள் தமது சட்டசபை அங்கத்துவத்தை உறுதிப்படுத்த சாதிய ஒதுக்ககீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இவர் அதையே இங்கு பின்பற்ற பாக்குறார்.
    இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை 2வருடம் ஆண்டவரின் வங்குரரோத்து நிலை.

    ReplyDelete
  2. ஜாதி ஜாலி,ஜாதி தமிழர் தாழ்த்தப்பட்டது தோல்வி அடைந்து இதனால்தான் நாங்கள் ,இஸ்லாத்தை தழுவினேம்.இஸ்லாம் ஜாதியை ஓழித்தது

    ReplyDelete
    Replies
    1. அண்மையில் மட்டகளப்பில் முஸ்லீம்களிடையே ஜாதி கலவரம்கள் இடம் பெற்றூள்து.தற்போது வளர்ந்து வரும் இஸ்லாமீய ஜாதி பீரிவான ஷீயா எனும் பிரிவினரின் வணக்கஸ்த்தலங்களை மேலாதிக்க முஸ்லீம்கள் தாக்கிய 5சம்பவங்கவ் 2மாதங்களில் பதிவாகியுள்ளது. ஷியா எனும் சாதியினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8000ஆக மட்டுமாவட்டத்தில் அதிகரித்து விட்டது.இது மட்டு மாவட்ட முஸ்லீம் தொகையில் 6%இலும் அதிகமாகும்.இதனை போறுக்க முடியாத மேலாதீக்க வாதிகள் அந்த பிரீவினரை ஒடுக்க விளைகின்றனர்.
      (

      Delete
  3. குமரா!
    பெருமாளுக்கு மாற்றீடாக ஐயப்பன் வந்தாலும் பெருமாள் சொன்னதுதான் யாழின் நிலவரமாக உள்ளது. புரியாவிட்டால் கல்முனையை விட்டு ஒருமுறை யாழ் சென்றுவாரும். உன் சாதி காரணமாக படலைக்கு வெளியே பாதையில் வைத்தே திருப்பியனுப்புவர்.

    ReplyDelete
  4. அப்ப அந்தோனி , சந்திரபால் போன்ற புலி இளவரசர்களுக்கு ஆப்புதான்.

    ReplyDelete
    Replies
    1. hello VoicePakistan, கொஞ்ச நாள இந்த பக்கம் காணாவில்லை.

      Delete

Powered by Blogger.