Header Ads



பொலிஸாருக்கு உண்மையான தேவையிருந்திருந்தால், ஞானசாராவை பிடித்திருக்கலாம் - சிராஸ்


4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டுவந்து ஞானசாராவை கைது செய்யும் உண்மையான நோக்கம் பொலிஸாருக்கு இருந்திருந்தால் அவரை எப்போதே கைது செய்திருக்கலாம் என மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

இன்று -21- ஞானசாரர் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்திலிருந்து சென்றார். அப்போது பொலிஸாரும் நின்றனர்.

ஞானசாரரை கைது செய்யும் நோக்கம் பொலிஸாருக்கு உண்மையாகவே இருந்திருக்குமாயின் அவரை இன்று கைது செய்திருக்கலாம். எனினும் இன்றைய நிகழ்வுகளை நோக்குகையில் அந்நோக்கம் பொலிஸாருக்கு இருந்ததா, இல்லையா என்பதை இலகுவில் புரிந்துகொள்ள முடிகிறது எனவும் சிராஸ் நூர்தீன் சுட்டிக்காட்டினார்,

1 comment:

  1. எச்சைகளிடம்.எதிர்பார்ப்பது,,வீண் எல்லாமே நாடகம் இது ,மொக சீரியாலாக தொடரும்

    ReplyDelete

Powered by Blogger.