Header Ads



அங்கொட லொக்கா, லடியா அழைத்து வரப்படுகிறார்கள்..!!

போலியான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி, இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற, இலங்கையின் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்பட்ட “லடியா”, “அங்கொட லொக்கா” ஆகிய இருவரையும், இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் அழைத்துவருவதற்கு, இலங்கைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனரெனத் தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னைக்கு தப்பிச்சென்ற இருவரும், சென்னை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.  

களுத்துறை சிறைச்சாலைகள் பஸ்கள் இரண்டின் மீது, கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக இவ்விருவரும் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர்களாவர்.  

இவ்விருவரையும் இலங்கை பொலிஸிடம் ஒப்படைப்பதற்காக, அவ்விருவரினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சென்னை பொலிஸார், இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.  

அதனடிப்படையில், அவ்விருவரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்த அறிக்கையை அனுப்பியதன் பின்னரே, சென்னை பொலிஸாரினால், அவ்விருவரும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

No comments

Powered by Blogger.