Header Ads



ரோஹின்யா மொழி அறிந்த, ஒருவர் உடனடியாக தேவை

இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் சகோதரி பொலிஸ் காரன் ஒருவனினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட சகோதரியிடமிருந்து வாக்குமூலம் பெற உடனடியாக ஒரு ரோஹின்யா மொழி அறிந்த தேவைப்படுகிறார்.

தொடர்புகளுக்கு Hakeem  0777 634121

இத்தகவலை மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்தினார்,

2

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மிரிஹானவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி மிரிஹான தடுப்பு முகாமில் குறித்த 21 வயதான யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து குறித்த யுவதி சுகவீனமடைந்த காரணத்தினால் களுபோவில வைத்தியசாலையில் குறித்த யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த யுவதியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மியன்மார் யுவதியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

வெளியே அழைத்துச் சென்று தற்காலிக விடுதி ஒன்றில் வைத்து மியன்மார் யுவதியை பாலியல் ரீதியாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மீளவும் இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த யுவதி தமக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் அறிவித்ததனைத் தொடர்ந்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.