Header Ads



மண் சரிவு, ஏற்பாடுத்தும் பாதிப்பு

இலங்கையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவினால் காணாமல் போனோர் தொடர்பில் இன்னமும் உரிய தகவல்கள் வெளியாகவில்லை.

காணாமல் போனோர் மீண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயற்கையின் சீற்றம் காரணமாக பல குடும்பங்களில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பி, ஏனையவர்கள் உயிரிழந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் மொரவக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை குறித்த பெண் இழந்துள்ளார்.

சந்தினி என்ற பெண்ணே இந்த துயர்மிகு சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும் தனது கணவர் மற்றும் ஒரு மகன் குறித்து அவர் இன்னமும் நம்பிக்கையுடன் இருப்பதாக சந்தினி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அவர்களின் சடலம் கிடைக்காமையே இந்த நம்பிக்கைக்கு காரணமாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

அவரது 7 வயது மகன் ஒருவரின் சடலம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளது.

குறித்த சடலத்தில் தலையும் இல்லை காலும் இல்லை. எனினும் தனது மகனை தான் அடையாளம் கண்டு விட்டதாக கண்ணீருடன் கதறியபடி சந்தினி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.