Header Ads



'கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு, எவ்வித பிரச்சினையும் இல்லை' - இலங்கைத் தூதரகம்

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், அவர்கள் வழமை போல தங்களது தொழில்களைத்செய்து வருகின்றனர் எனவும் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கையர்கள் பணி புரிந்துவருகிறார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் அவர்களிடமுள்ள ரியால்களை அந்நாட்டு விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் அமெரிக்க டொலர்களாக மாற்றிக்கொள்ள முடியும் எனவும், அங்குள்ள இலங்கையர்கள் பற்றிய விவரங்களை அறியவிரும்புவோர் தூதரகத்தின் +97 455564936 - + 974 5556 4936 என்னும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.