Header Ads



சிறிலங்காவுக்கு, கட்டாருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை

கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், நிலைமைகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

கட்டாரில் உள்ள, அந்த நாட்டுடன் உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.” என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

அதேவேளை, கட்டாரில் உள்ள இலங்கையர்கள் நேரடியாக எந்தப் பாதிப்பையும் எதிர் கொள்ளமாட்டார்கள் என்று சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பிராந்திய விவகாரம். இதனால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை. இராஜதந்திர ரீதியாக சிறிலங்காவுக்கு கட்டாருடன் எந்தரப் பிரச்சினையும் இல்லை.

1 comment:

Powered by Blogger.