Header Ads



"நான் இஸ்லாமியன்" என்பது, என்னை கொல்வதற்கு போதுமானதே.!

நான் பேருந்தில் செல்லும்போதோ ரயிலில் செல்லும்போதோ கொலை செய்யப்படலாம், "நான் இஸ்லாமியன்" என்ற ஒரு காரணம் என்னை கொல்வதற்கு போதுமானதே.!

அப்போதும் என்னை காக்க கைகள் வராது, கண்கள் வேடிக்கை பார்க்கும், சில உதடுகள் 'அவனை கொல்லுங்கள்.!' என முணுமுணுக்கும். 'நமக்கேன் வம்பு' என பலர் ஒதுங்கி கொள்வர்.

இரத்தம் முழுக்க வெளியேறி சரிந்து கிடக்கும் என் சிவந்த மேனியுடன் வீடியோக்களும், செல்பிகளும் எடுத்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் நடந்தேற ஒரே காரணம் மட்டும் போதும் "நான் இஸ்லாமியன்".

"சக மனிதனாய் உங்களை போலவே இரண்டு கை, இரண்டு கால், சிவந்த குருதி, தடித்த தோலுடன் எந்த முரண்பட்ட வித்தியாசமுமின்றி கோடிகளில் ஒருவனாய் வாழ்ந்து தானே வந்தேன்.. இன்று ஏன் கொல்லபடுகிறேன்" என சிந்தித்து விடை கிட்டும் முன்பே என் உயிர் என் உடலை விட்டு விலகியிருக்கும்.

என் மரணத்தை கண்டு பெரும்பாண்மையின் கண்கள் அழுகாது, உள்ளங்கள் வருந்தாது, கண்டும் காணதது போல் கடந்து சென்று விடும், அதற்கு அவர்கள் பழக்கபடுத்தபட்டு விட்டார்கள். இவை அனைத்தும் நடந்தேற ஒரே காரணம் மட்டுமே போதும் "நான் இஸ்லாமியன்"

என் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை "நான் இஸ்லாமியன்" என்பதால் கொல்லபட்டு விட்டேன் என்று அவர்கள் கதறல்கள் என் காதுகளில் விழாது, என் அன்னையின் அணைப்பின் சூட்டை உணராது சவமாய் கிடப்பேன்..

இவைகள் நடக்காது என உறுதியிட்டு சொல்பவர் "இஸ்லாமியன் என்பதற்காக மட்டுமே கொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவன் ஜூனைதின் கல்லறையை பார்த்து விட்டு வரவும்" அங்கே உதாரணமாய் உறங்கி கொண்டிருக்கிறான்..

-வாட்ஸ்அப்'பில் வேதனையுடன் வாசித்தது..

2 comments:

  1. இவை அனைத்துக்கும் மேலாக உயர்ந்த ஷஹீத் என்ற பட்டத்துடன் சுவனம் புகுவேன் இன்ஷா அல்லாஹ் நான் இஸ்லாமியன் என்பதால் கொல்லப்பட்டதற்காக!!!!!

    ReplyDelete
  2. Online earning well said but we mustn't die as cowards, we need to prepare ourselves to defend. For that we need to unite as " Muslims" first.

    ReplyDelete

Powered by Blogger.