Header Ads



இலங்கையில் சனிக்கிழமை, பிறை பார்க்குமாறு கோரிக்கை

(ஐ. ஏ. காதிர் கான்)

ஹிஜ்ரி 1438 - ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு, (24) சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. 

சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.29 மணி முதல், ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்குமாறும், நாட்டின் எப்பாகத்திலாவது தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 5234044, 011 2432110, 077 7316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2390783 என்ற (பெக்ஸ்) தொலை நகல் ஊடாகவோ  அறியத்தருமாறும், சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது. 

இம்மாநாட்டில், உலமாக்கள், கதீப்மார்கள் உள்ளிட்ட கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும்  அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா பிறைக் குழுக்களின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம்  மற்றும் இலங்கை ஷரீஆ கவுன்சில்  பிரதிநிதிகள்,  ஜும்ஆப் பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தக்கியாக்கள் மற்றும் ஹனபி,  மேமன் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர்  கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.