இஸ்லாமிய உலக நெருக்கடி, மனமுருகி பிரார்த்தியுங்கள், ஒற்றுமைப்பட முஸ்லிம் நாடுகளுக்கு கடிதம்
-விடிவெள்ளி-
சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள், கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தமது நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சுமத்தி அந்நாட்டுடனான இராஜதந்திர தொடர்புகளையும் தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்துகளையும் துண்டித்துக் கொண்டுள்ளமைக்கு கவலை வெளியிட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சம்மந்தப்பட்ட நாடுகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுமாறு ஏனைய அனைத்து முஸ்லிம் நாடுகளையும் கோரவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்தக் கோரிக்கையை கடிதம் மூலமாக விடுக்கவுள்ளதாகவும் இவ்வாரம் கடிதங்கள் அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கட்டார் விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்,
கட்டாருடன் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ள பஹ்ரைன், சவூதி அரேபியா, அரபு இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறும் இல்லையேல் முஸ்லிம் உலகம் முழுவதும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்பதையும் சுட்டிக்காட்டவுள்ளோம்.
சம்மந்தப்பட்ட நாடுகளை ஒற்றுமைப்படுத்துவதற்கான மாநாடொன்றினை நடத்துமாறும் ஏனைய உலக முஸ்லிம் நாடுகளை உலமா சபை கோரவுள்ளது. பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ், துருக்கி, குவைத் உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு உலமா சபை கடிதங்களை அனுப்பிவைக்கவுள்ளது.
இஸ்லாமிய நாடுகளை மையப்படுத்தி இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சியே தற்போது அரங்கேறி வருகிறது. இந்நிலைமை இஸ்லாமிய உலகை சின்னா பின்னமாக்கி அழித்து விடுவதாக அமையும். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகள், முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
தற்போது இஸ்லாமிய உலகில் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டு விடுவதற்கு இந்தப் புனித ரமழான் மாதத்தில் நாமனைவரும் மனமுருகி பிரார்த்தனை புரிய வேண்டும் என்றும் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
May Allah swt accept the efforts of ACJU. Haters will give negative comments. Don't bother about it. Carry on your work with sincerity.
ReplyDeleteநீங்க கடிதம் அனுப்புவதற்கு முன்னதாவே அவர்கலின் பிரச்னை முடிந்து விடும்
ReplyDeleteபொதுவாக உலகில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும்
Deleteகுறிப்பாக இலங்கையில் இத்தனை அமைப்புகள் இருந்தும்
இந்த ஒரு அமைப்பாவது முயற்சி எடுக்கிறதே அதை ஊக்கப்படுத்துவதை விடுத்து...
அல்லாஹு தஆலா உங்கள் ஒற்றுமை முயற்சிகளை அங்கீகரிப்பானாக !!!
ReplyDeleteMay Allah swt accept your efforts and bring peace in Middle east.
ReplyDeleteLanka la iwwalaw pirachina nadakkuzu...azukke letter wara late achi...izukku quick a letter vandiche...ACJU is very fast
ReplyDeleteWe should stay with Ulama
ReplyDeleteOther muslim countries collapsed by
Separation of publics and Ulamas